தமிழக சத்துணவு துறையில் உதவியாளர் வேலைவாய்ப்பு
கணினி உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாத தொடக்கத்தில் வெளியானது. இங்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கணினி உதவியாளர் பதவிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் M.S.Office அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். இளநிலை தட்டச்சு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த அரசு பணியானது முற்றிலும் தற்காலிகமானது. பணியாளர் வேலை திருப்திகரமாக இருப்பின் இப்பணியிடத்திற்கு உரிய பணி தொடராணை பெறப்பட்டு பணிக்கால நீட்டிப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.12,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்கள் 16.11.2021 அன்று மாலை 5.00 மணி வரை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்பதால் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது
No comments:
Post a Comment