டெல்டா பகுதி என்றால் என்ன?
ஒரு ஆறு மலையில் தோன்றி கடலில் கடக்கும், மலைப்பகுதி சரிவாக உள்ளதால் மிகவும் வேகமாக ஓடும் அப்போது அதன் வழியில் உள்ள அனைத்தையும் அடித்து நொறுக்கி தன்னுடன் எடுத்துச் செல்லும். மலையடிவாரம் கடந்து சமதள பகுதியை அடையும் போது அதன் வேகம் குறையும் அப்போது பெரிய அளவு பாறை மற்றும் கல் ஆகியவை அங்கேயே இட்டு தன் பயணத்தைத் தொடரும். அந்த ஆறு கடலினை அடையும் போது மிக மெதுவாக நகரும் அப்போது அந்த ஆறு தன்னுடன் கொண்டு வந்த மணல்கள், வண்டல் மற்றும் களிமண் அனைத்தையும் விட்டுச் செல்லும் பல கிளைகளாகவும் பிரிந்து செல்லும் அந்த உருவமைப்பு பார்க்க கணிதத்தில் உபயோகிக்கும் ∆ போன்று இருக்கும் எனவே அந்த நிலப்பகுதியை டெல்டா எனக் கூறுவர்.
கழிமுகம் (டெல்டா) என்றால் ஒரு முக்கோண வடிவிலான குறைந்த, தட்டையான நிலப்பரப்பு ஆகும். அங்கு ஒரு நதி பிரிந்து கடலுக்குள் நுழைவதற்கு முன்பு பல கிளைகளாக பரவுகிறது.
இப்பகுதியில் தண்ணீர் நன்றாக இருப்பதால் இங்கு வயல் நிலங்கள் அதிகமாக இருக்கும். முக்கியமாக நெல் வயல்கள்.
கங்கை – பிரம்மபுத்திரா டெல்டா, வங்காளதேசத்தின் பெரும்பகுதியிலும், மேற்கு வங்காளத்திலும் பரவி, இந்தியா வங்காள விரிகுடாவில் கலக்கிறது, இது உலகின் மிகப்பெரிய டெல்டா ஆகும்.
தமிழில் நாட்டில் மிக முக்கியமான ஆறு காவிரி என்பதினால், இந்த ஆறு கடைசியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் போய் டெல்டாவாக மாறுகிறது.
No comments:
Post a Comment