வங்கி கணக்கு, ரேஷன் கார்டு, பான் கார்டு எனத் தொடங்கி விரைவில் தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் முடிவைப் பரிசீலித்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆதார் கார்டு தொடர்பான வழக்கு ஒன்று ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் ஆதார் கார்டுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாகவும், இதனை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இந்தியாவில் 18 வயது பூர்த்தி ஆன ஒவ்வொரு குடிமக்களும் ஓட்டுப் போட உரிமை பெற்றவர்கள் ஆவார். ஆனால் வாக்களிக்க அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை என்பது முக்கியமாகும். அதே நேரம் இந்த வாக்காளர் அடையாள அட்டையினை ஒன்றுக்கு மேற்பட்டு பலர் வைத்துள்ளனர் என்றும் அவ்வப்போது செய்திகள் வந்துகொண்டு தான் இருக்கின்றது.
இப்படிப்பட்ட நேரத்தில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் வைத்துள்ளவர்களைக் கண்டறிந்து நீக்கலாம் என்று முடிவு செய்த மத்திய இதனை நடைமுறைப்படுத்தியும் வருகின்றது.
இதைப்பேலவே வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்களும் இணைக்க வேண்டும் என்று தற்போது செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இங்கு நாம் வாக்காளர் அடையாள அட்டையுடன் பான் எண்ணை எப்படி இணைப்பது என்று இங்குப் பார்ப்போம்.
ஆதார் கார்டினை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க முதலில் தேசிய வாக்காளர் சேவை தளத்திற்குச் செல்ல வேண்டும். பின்னர்க் கீழ் காணும் படிகளைச் செய்வதன் மூலம் சில நிமிடங்களில் இணைப்பைச் செய்துவிடலாம்.
No comments:
Post a Comment