Thursday, November 25, 2021

Wipro வேலைவாய்ப்பு

 விப்ரோ நிறுவனம் ஆய்வாளர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பது தொடர்பான அனைத்து செயல்முறை விளக்கங்களும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

Wipro வேலைவாய்ப்பு:

இந்திய ஐடி நிறுவனமான விப்ரோ நொய்டா வளாகத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான ஆட்சேர்ப்பு இயக்கத்தை தொடங்கியுள்ளது. ஆய்வாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் கணினி அமைப்பு தேவைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்று விப்ரோ தெரிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான விண்ணப்ப செயல்முறை குறித்து கீழே விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

ஆய்வாளர் பணிக்கு (Analyst Posts) விண்ணப்பதாரர்கள் BCA, B.SC -IT, B.Sc-CS, BE, B-tech, MCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒரு வருட அனுபவத்துடன் புதியவர்களும் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஒரு வருடத்திற்கான சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விப்ரோவில் ஆய்வாளர் பணிக்கு தகுதியான பட்டதாரிகள் விப்ரோ கேரியர் அதிகாரப்பூர்வ போர்டலின் https://careers.wipro.com மூலம் விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். இது தொடர்புடைய காலியிடங்களுக்கான விண்ணப்ப இணைப்பைக் கிளிக் செய்து தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் விப்ரோ நொய்டா மையத்தில் பணிபுரிய வேண்டும்.

எலைட் நேஷனல் டேலண்ட் ஹன்ட் பதிவு:

விப்ரோ நிறுவனத்தில் சமீபத்தில் எலைட் நேஷனல் டேலண்ட் ஹன்ட் 2021 (NTH)க்கான ஆன்லைன் பதிவு செயல்முறையை நடத்தி முடித்துள்ளது. எலைட் என்டிஎச்-2021 டிரைவ் நாடு முழுவதும் ப்ராஜெக்ட் இன்ஜினியர் பதவிக்கு 2021 பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து சிறந்த விண்ணப்பதாரர்களை நியமிக்கும் திட்டம் ஆகும். பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பட்டம் அல்லது 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.டெக் பட்டம் பெற்றவர்கள் திட்டத்தில் பங்கேற்கத் தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

ராணி லட்சுமிபாய்

  ராணி லட்சுமிபாய்: பிறப்பு, குடும்பம் மற்றும் கல்வி  ராணி லக்ஷ்மிபாய் நவம்பர் 19, 1828 இல் மராத்தி கர்ஹடே பிராமண குடும்பத்தில் மோரோபந்த் தம...