சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ், புதிதாக 1.01 லட்சம் பயனாளிகள் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
தமிழகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ், 33 லட்சத்து 31 ஆயிரத்து 263 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இத்திட்டங்களுக்கு, நடப்பு நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட்டில் 4,807.56 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.தற்போது, சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ், ஓய்வூதியம் கோரி புதிதாக வரப்பெற்ற விண்ணப்பங்களில், 1.01 லட்சம் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கண்டறியப்பட்டனர்.
இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 48 ஆயிரத்து 77; இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 1,359; இந்திரா காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 4,346; மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதிய திட்டத்தில், 14 ஆயிரத்து 739.
ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதிய திட்டத்தில், 28 ஆயிரத்து 209; முதல்வர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் 2,397; கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்றோர் ஓய்வூதிய திட்டத்தில் 1,732 பேர், 50 வயதுக்கு மேற்பட்ட ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில் 554; முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில் 61 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மொத்தம் ஒரு லட்சத்து 1,474 பயனாளிகளுக்கு, ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்குவதற்கு அடையாளமாக, நேற்று தலைமை செயலகத்தில், 10 பயனாளிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார்.
தமிழகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ், பயனாளிகளுக்கு ஓய்வூதியமாக மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.இத்தொகையை பெறும் பயனாளிகள், அடையாள சான்றாக தங்களின் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். தற்போது ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருப்போரிடம், ஆதார் எண் இல்லை என்றால், அவர்கள் உடனடியாக ஆதார் எண் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்ததற்கான ரசீதை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்ததற்கான ரசீதை சமர்ப்பிக்க வேண்டும்.
.
No comments:
Post a Comment