Sunday, January 23, 2022

பொது அறிவு

இரத்தம் பேசுமா?

நவீன மருத்துவம் மனித இரத்தத்தை A, B, AB,O என்பது போன்ற சில வகைகளாகப் பிரித்து வைத்துள்ளது. ஒரு குறிப்பிட்ட வகை இரத்தத்தினை அதே வகை இரத்தம் உடையவர்களுக்குத்தான் செலுத்திப் பயன்பெற முடியும். மருத்துவமனையில் இதய சிகிச்சை பெற்றுவரும் ராமசாமி என்பவருக்கு இரண மருத்துவத்துக்காக A வகை இரத்தம் இரு பாட்டில்கள் தேவைப்படுகிறது என்பது போன்ற பல செய்திகளையும், நாம் தினமும் பார்க்கின்றோம், கேட்கின் றோம். இத்தகைய அறிவிப்புகளை ஏன் செய்கிறார்கள்?"



இந்த இராமசாமிக்கு அவர் தந்தை சிவசாமியின் இரத்தத்தையோ, சகோதரர் கோவிந்தசாமியின் இரத்தத் தையோ, மகன் கிருஷ்ணசாமியின் இரத்தத்தையோ சிறிது கொடுத்துவிட்டுப் போகலாமே! அவை ஒன்றுக்கொன்று பொருந்தாதா என்ன? அனைவரும் தந்தை, மகன், உடன்பிறப்பு என்ற 'இரத்த பந்தமுள்ள' உறவுகள்தானே. ஏன் இந்த விளம்பரங்கள், பணச் செலவு எல்லாம் செய்ய வேண்டும் என்பதுபோல சிலர் நினைக்கக் கூடும். ஆனால் தந்தைக்கும், மகனுக்கும், பேரனுக்கும், அண்ணன் தம்பிகளுக்கும் வெவ்வேறு வகை இரத்தம்தான் இயற்கையில் அமையும். சில தருணங்களில் மட்டும் ஒரே வகை இரத்தம் அமையலாம்.

நவீன மருத்துவப்படி மனிதனுக்கு மனிதன் A, B. AB போன்ற பலவகை இரத்தங்கள் மாறுபட்டே விளங்கு கின்றன. இங்கு உறவுகள் இரத்த வகைகளை இணைப்ப தில்லை. தந்தையின் இரத்தம்தானே மகன் உடம்பில் ஓடுகிறது என்பதெல்லாம் விஞ்ஞானப் பூர்வமான உண்மை அல்ல. பரம்பரை இரத்தம், வீர இரத்தம், இரத்தப் பாசம், இரத்த சம்பந்தம், இரத்தம் கொதிக்கிறது. பேசுகிறது என்பது எல்லாம் வெறும் அடிப்படை உண்மையற்ற அலங்காரப் பேச்சுகள்தாம் என்பதை நாம் சற்றும் புரிந்துகொள்ள வேண்டும். இரத்தத்துக்கும். இரத்த வகைக்கும், மரபியல் பண்புகளுக்கும் உள்ள சம்பந்தம் மிகக் குறைவே ஆகும்.

நிறத்தளவில்தான் இரத்தம் மனிதனுக்கு மனிதனை அதிகம் இணைக்கிறது. ஆம்! இரத்தம் ஒரே நிறம்தான்.

ஆடு ஊசலே ஆடு!

இது கடிகார உலகம். ஆம், காலம் பறக்கிறது. இதில் சுவர்க் கடிகாரத்துக்கும், கைக்கடிகாரத்திற்கும் ஒரு முக்கியமான வேற்றுமை உண்டு. தரமான கைக்கடிகாரம் குளிர் மற்றும் வெப்பக் காலங்களில் மாறுபட்ட நேர மாற்றத்தைக் காட்டுவதில்லை. ஆனால், மிகச் சிறந்த தயாரிப்பாக இருந்தாலும் சுவர்க் கடிகாரங்கள் குளிர்க் காலங்களில் விரைவாக நேரங்காட்டுவதோடு, வெப்பமான அதிக நாட்களில் நேரத்தைச் சற்றே குறைத்துக் காட்டுகிறது. இந்த முரண்பாடு ஏன்? சுவர்க் கடிகாரத்தின் நீண்ட பெண்டுலத்தின் பக்க அசைவுகளே



காலத்தை வினாடிகள் மூலம் நிர்ணயிக்கின்றன. மெல்லிய உலோகத்தால் ஆன இந்தப் பெண்டுலம், கோடையில் வெப்பத்தால் விரிவடைவதால் அது ஆடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் அதிகரித்து அது கடிகார எண்களில் பதிவு செய்து காட்டும் நேரம் குறைகிறது. கடிகாரம் தாமதமாக ஓடுகிறது என்கிறோம் நாம். அதேபோல குளிர்காலத்தில் பெண்டுலத்தின் நீளம் குறைவதால் நேரத்தை அதிகரித்துக் காட்டுகிறது.

வெப்பத்தால் உலோகப் பொருட்கள் விரிவடைவது அடிப்படை பௌதீகம். இதனை உணர்ந்த பிறகே நவீன சுவர்க் கடிகாரங்களில் முழுவதும் மரத்தினால் ஆன பெண்டுலங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் நீட்டலும், குறைதலும் இல்லை....

அலை கூறும் மொழி

வான சாஸ்திரம் நம் இந்திய நாட்டின் பழங்கால விஞ்ஞானமாகும். ஆர்யபட்டர், வராஹமிஹிரர் போன்ற மௌரிய பேரரசிலுள்ள அறிஞர்கள் வளர்த்துவிட்ட விஞ்ஞானக் கலை இது. "அலை அறிவு வான இயல்" என்ற நவீன விஞ்ஞானம் நமது பண்டைய வான இயல் பெற்று எடுத்த புதுக் குழந்தையாகும். இந்தப் பிரிவு ஒலி அலைகள் மூலமாக இந்தப் பரந்த வான்வெளியில் பூமியைத் தவிர பிற கிரகங்கள், அவை நகரும் பாதை முதலியவற்றை அறிந்துகொள்ள உதவும் விஞ்ஞானம் ஆகும். நவீன இத்தகைய நவீன ஆய்வு முறை கண்டறியப் படுவதன் முன்னர் நீண்ட தொலைநோக்குக் கருவிகளின் மூலமாகத்தான் கிரகங்களைப் பற்றிய ஆய்வுகள் இத்தாலிய விஞ்ஞானி 'கலிலியோ' அவர்களால் வித்திடப்பட்டு தொடர்ந்து நடந்து வந்தன. ஆனால், இப்புதிய முறை ஆய்வு ஒரு தற்செயலான நிகழ்ச்சியின் மூலமாகத்தான் உலகினர் உணரக் காரணமானது. அது இதுதான். இரண்டாம் உலக யுத்தத்தின்போது இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இராணுவ நுணுக்கப் பொறியாளர்கள் கம்பி இல்லாத கேட்பான் கருவிகளின் இராணுவத்தினர் ஒருவருக்கு ஒருவர் விடுக்கும் செய்தியின் மூலம் எதிரி ஒலி அலைகளைப் பிடிக்க முற்படும்போது சூரிய மண்டலத்திலிருந்து வெளியேறி வந்த 'ரேடியோ அலைகள்' தற்செய லாக அவர்களது கருவியில் பிடிபட் டதே இவ்விஞ்ஞான முறைக்கு மூல காரணமாம்.



இதனைப் போன்றே சனி, வியாழன், செவ்வாய் போன்ற கிரகங்களிலிருந்து வெளிப்படும் ரேடியோ அலைகளை அறிந்து வானியல் அறிவை இன்றைய உலகம் நன்கு வளர்த்து வருகிறது. பண்டைக் காலத்தில் 'சாலமன் ஞானி' எறும்புகளின் பேச்சையும் அறிவாராம். நமது விக்ரமாதித்ய மன்னன் பல மிருகங்களின் மொழியை உணர்ந்திருந்தாராம். பண்டைய அறிஞர்களில் பலர் பறவை மொழிகளையும், மிருகபாக்ஷையையும் நன்குக் கற்றிருந் தனர். தாம் இன்று அவர்களைப் பல படிகள் மிஞ்சி முன்னேறி நவக்கிரகங்களின் தாய் மொழிகளைக்கூட கற்கவும், கற்பிக்கவும் ஆரம்பித்து விட்டோமே.

ஆர்வங்கள் முடிவதில்லை



'மனிதனைப் பகுத்தறிவ மிக்க உயர்ந்தவகைப் பிராணி' என்றார் கிரேக்கப் பேரறிஞர் அரிஸ்டாடில். "மக்கள் தாமே ஆறு அறிவினர்'' என்று சொல்லிச் சென்றார் அன்றைய தொல்காப்பியர். குரங்கு வகைகள் பிற பிராணிகளிடமிருந்து தனிச் சிறப்புகளை எல்லாம் சேர்த்துப் பெற்ற மூளை வளர்ச்சியின் அடிப்படையில் உயர்ந்து நின்றதும், பிறகு குரங்கு வகைகளின் முழுப் பூர்த்தியாக மனிதன் தோன்றியமைக்கும் சான்றுகள் பல உள்ளன. இவ்வாறாகக் குரங்குகளும், பின்னர் மனித இனமும் பிற பிராணிகளைவிட முன்னேறி உயர்நிலை அடைந்தமைக்கு அடிப்படைக் காரணமாக ஒரு முக்கியமான பண்பு திகழ்கிறது. அப்பண்பு பிற மிருகங்களுக்கு மிகவும் குறைவேயாகும். அப்பண்புதான் எதனையும் நன்கு புலப்படும்படி அறிந்துகொள்ளும் ஆர்வம் அல்லது தூண்டுதல் பண்பு ஆகும்.

இன்றைய விஞ்ஞான, கலை, கலாசார முன்னேற்றங் களின் முதல் படிக்கல் ஆர்வம்தான். மனிதனின் இந்த அறிய விரும்பும் ஆர்வமே பல கண்டுபிடிப்புகளின் முன்னோடி. அறியும் ஆர்வம் ஒருவரின் கல்வித் தகுதியைச் சார்ந்தது அன்று. சிலரது ஆர்வங்கள் மிகவும் விசித்திரமானவை. 25 ஆண்டுகளுக்கு முன்னர் 1957-ஆம் ஆண்டு மே மாதம் 2-ஆம் தேதி பிரான்சு நாட்டில் 'பிங்கி' என்ற பகுதியில் வாழ்ந்த 38 வயதுத் தொழிலாளியான ஜோசப் பேக்கர் என்பவர் உடல் உறுப்புகளைப் பற்றி விளக்கும் ஒரு கல்விப்படம் கண்டார்.

அதில் இதயம் மனித உடலில் பணிபுரியும் விதம் பற்றி காட்டப்பட்டிருந்த விதம், அவரை மிகவும் கவர்ந்து இழுக்கவே, அவர் ஒரு நீண்ட சவரக்கத்தியினை எடுத்தார். மிகுந்த விசையுடன் தனது இடது மார்புக்கூட்டின் கீழ் பகுதியை கத்தியால் கிழித்துப் பிளந்து தனது சொந்த இதயம் வேலை செய்வதை பேராவலோடு சில நிமிடங்கள் கண்டு களித்த பின்னர் ஜோசப் பேக்கர் மயக்கமுற்று விழுந்துவிட்டார். சுற்றி நின்றவர்கள் தக்க சிகிச்சை செய்து அவரைக் காப்பாற்றி விட்டனர். தனது இதயத் துடிப்பை தானே கண்களால் கண்ட முதல் மனிதனும், கடைசி மனிதனும் இவராகத்தான் இருக்க முடியும். ஆர்வங்கள் முடிவதில்லை....

சில சூட்டிலும் சில குளிரிலும்



பூமி பல வகை மாறுபட்ட தட்பவெப்ப நிலையை கொண்டதாகும். பூமியின் ஒரு முனையில் உள்ள அன்டார்டிக் பகுதியில் 0°C-க்கும் கீழே உள்ள குளிர்ப் பிரதேசங்கள் உள்ளன. 'மென்டா' என்ற இங்குள்ள ஒரு இடத்தின் வெப்பம்-88°C ஆகும். இது சைபருக்கு 88 டிகிரி வெப்பம் குறைந்த இடம். ஆனால், அதே பூமியிலுள்ள ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் +55°C வெப்பக் கொடுமையும் உண்டு. வெப்ப நிலையில் பூமிக் கிரகத்துக்குள்ளேயே இத்தகைய முரண்பாடு உண்டு. ஆனால், பூமிப் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதி தாங்கக் கூடிய அளவு வெப்பமுடையவைதாம். இக்காரணத் தாலேயே பெரும்பான்மை உயிரினங்களின் அனைத்துச் செயல்கள் 0°C-யிலிருந்து 40°C வெப்பம் வரையுள்ள நிலையிலேயே நடைபெறுகின்றன. இருப்பினும் ஒரு சில தாவரங்களுக்கும், பிராணிகளுக்கும் இந்த 0°C முதல் 40°C வெப்பநிலை கூட மிகக் குறுகிய அளவாகி விடுகிறது.

உதாரணமாக சில தாவர பாசியினங்கள் 70 முதல் 70°C உள்ள பகுதியில்தான் சுயமாக இனப்பெருக்கம் செய்து நன்கு செழித்து வாழ்கின்றன. சில வகைப் பாசிகளோ 0°C குறைந்த வெப்பத்தில் வாழ்கின்றன. அதே சமயம் எரிமலைக் குழம்பில் வாழும் நுண் உயிர்களும் உண்டு. 200 ஆண்டுகட்கு முன்னரே இத்தகைய அதிசயிக்கத்தக்க உயிர்வாழ் மாற்ற நிலைகளை உலகில் ஹொரேஸ் பெனடிக்ட் டீ சாஸ்ஸுர்

என்ற சுவிஸ் நாட்டு இயற்கை வள அறிஞர். கண்டறிந்துவிட்டார். இவரது பயணக்குழுவினர் கண்ட மற்றதொரு பேராச்சரியம் செம்பனிப் பாறைகளாகும். பனிமலையில் இரத்தச் சிவப்பு நிற பனிப் பாறைகள் அடைத்து நின்ற காட்சியை பிரமிக்கத்தக்க ஆய்வுகளின் மூலம் உலகிற்கு உணர்த்தினர்.

பனிப் பாறையை படலமாக மூடியுள்ள ஒற்றைச் செல் உயிரினங்களான கண்ணுக்குப் புலப்படாத 'கிளைமடை மோனாஸ் என்ற நுண்பாசியே இந்தச் சிகப்பு நிறத்துக்குக் காரணமாகும். இவ்வுயிர்கள் ஆர்டிக், அன்டார்டிக் மற்றும் உயர்ந்த 'காகஸஸ்' மலைப் பகுதிகளிலும் பனி மீது பல கோடிக் கணக்கில் படிந்து வாழ்கின்றன. இப்பனி உயிர்கள் வெப்பத்துக்கு அஞ்சுபவை. 4°C வெப்பத்தையும் தாங்க இயலாதவை. தற்போது 140-க்கும் மேற்பட்ட சிற்றுயிர் வகைகள் பனிப்பாறைகளில் மட்டுமே வாழும் தகுதி யுடையவை. சிறிது வெப்பம் அதிகரிப்பினும் அவை உடன் இறந்துவிடும்.

'டெரிபெல்லிட்' எனப்படும் ஒரு புழு வகை கிரீன்லாந்த் அருகிலுள்ள ஆர்டிக் கடலின் பகுதியில் வாழ்கின்றன. சூரிய ஒளி தென்படும்போது இவை கூட்டங் கூட்டமாக மடிந்துவிடுகின்றன.

ஆனால், அரேபிய தீபகற்பத்துக்கு அருகிலுள்ள வெப்ப மான உப்புநீர் ஏரிகளில் வாழும் நண்டு வகைகள்தான் அதிக வெப்பந்தாங்கி பெரும் உயிர்களாகும். வெப்பநிலை 35°C ஆகக் குறைந்தால்கூட அவை குளிரால் நடு நடுங்கி இறந்துவிடுகின்றன.

மனித உடலின் உள்ளே வாழும் சில மிகச் சிறிய நுண் உயிர்கள் மனிதனது உணவு வகைகளால் மாற்றம் ஏற்பட்டு உடல் வெப்பம் அதிகரித்தாலோ, குறைந்தாலோகூட மடிந்து விடுகின்றனவாம்.

வெட்டு ஒன்றானால் துண்டு இரண்டுதானே

ஒரு கோழியிடம் 15 முட்டைகளை அடைகாக்க வைக்கின்றவர் 30 கோழிக் குஞ்சுகளையா எதிர்பார்க்கிறார்? முட்டைக்கு ஒரு குஞ்சைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம்.



முட்டையிடும் உயிரினங்கள் அனைத்தும் முட்டைக்கு ஒரு குஞ்சைத்தான் வெளியிடுகிறது. ஆனால் இயற்கையின் சட்டம் அல்ல. ஒரு முட்டை இரு குஞ்சுகளையும் தரக்கூடும். திகைக்க வேண்டாம்! இது ஒரு உயிரியல் இயற்கை. பிளாஸ்டோமியர் என்ற இரு பிரிவுகள் முட்டை கருவில் இயற்கையாக ஏற்பட்டால் ஒரு முட்டை இரு குஞ்சுகளையும் தருவதுண்டு. மனிதப் பேறு காலங்களில் இரட்டைக் குழந்தைகள் வருவது எவ்வாறு? கருவுற்ற ஒரு அண்டம் இரண்டாய் பிளவுற்று வளர்ந்து ஒரே அமைப்புடைய இரட்டையர்களை பிறக்கச் செய்கிறது. இல்லாவிட்டால் தாய் வயிற்றில் ஏக காலத்தில் இரு கருமுட்டைகள் சினையாகி இரு மாறுபட்ட அமைப்புள்ள இரட்டைக் குழந்தைகளைப் பெறச் செய்கிறது. எனவே நாம் அறிந்துகொள்ள வேண்டியது 'ஒரு முட்டைக்கு இரண்டு குஞ்சுகளும் உண்டு சில சமயங்களில்' என்ற உண்மையையே. 

No comments:

Post a Comment

ராணி லட்சுமிபாய்

  ராணி லட்சுமிபாய்: பிறப்பு, குடும்பம் மற்றும் கல்வி  ராணி லக்ஷ்மிபாய் நவம்பர் 19, 1828 இல் மராத்தி கர்ஹடே பிராமண குடும்பத்தில் மோரோபந்த் தம...