Saturday, January 29, 2022

அறிவியல் உண்மை

 வயிற்றைச் சுருக்கு



லுகுல்லாஸின் விருந்து' என்று கேள்விப்பட் டிருக்கிறீர்களா? ‘லுகுல்லஸ்' என்பது ரோமானிய விருந்து தேவதை. ரோமானியர்கள் கிரேக்கர்களை அடுத்து உலகின் நாகரீகத்துக்கு வழிகாட்டியவர்கள். நன்கு வாணிபம் செய்யவும், கல்வி அறிவைப் பெருக்கவும், அதனைவிடக் குறிப்பாக உடுத்தவும், உண்ணவும் அன்றைய நாள் ரோமானியர்கள் சிறப்பாகக் கற்றிருந்தனர். பலவகை மாமிச உணவுகளைப் படைத்தும், உபசரித்தும், புசித்தும் மகிழ்ந்தனர். ஒரு செயலுக்கு ஒரு கடவுளைப் படைத்துள்ள இந்து மதத்தில்கூட உணவுக்கும், உண்பதற்கும் ஒரு அதி தேவதை கிடையாது.


ஆனால் ரோமர்களுக்கு உணவு உண்ணக்கூட ஒரு விருந்துக் கடவுள் இருந்தாரென்றால் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்களேன். அன்றைய நாள் ரோமானியர்கள் தேவதைக்காக அதிகமான உணவினை வயிற்றில் அடைத்துக் கொள்வராம். பின் இரு விரல்களை வாய்க்குழியில் செலுத்தி வாந்தி செய்துவிட்டு மீண்டும் மீண்டும் உண்பராம். எப்படி? சரி விஷயத்துக்கு வருவோம். உணவு இவ்வாறாக தேவைக்கு அதிகமாக உண்பதில் ஒரு பயனும் இல்லை. ஆனால், உயிருக்கு உயிர் உணவின் தேவை மாறுபட்டே விளங்கும்.


சிறிய பிராணிகள் அதிக அளவில் உண்பதும், பெரிய உயிரினங்கள் அவற்றின் உடல் அளவின் விகிதத்தில் மிகக் குறைந்த அளவே உண்ணும் செய்திகளும் நிறைய உள்ளன. சான்றாக மூஞ்சுறு வகை எலி அதன் எடையளவு உணவை ஒரு நாள் உண்ணுகிறது. சில சமயங்களில் ஒரே வேளையில் இந்த எலி வகைகள் தன் எடையைப் போல் 3 மடங்கு உணவையும் கபளீகரம் செய்து விடுகின்றன. ஆனால், உலகின் மிகச் சக்திவாய்ந்த ஆற்றல் மிகு உயிராகவும், பரிணாமத்தின் இறுதிப்படியில் நிற்கும் முன்னேற்றமிக்க ஜீவராசி ஆகவும் மதிக்கப்படுகின்ற மனிதனால் இந்த மூஞ்சுறு எலியின் சாதனையை நினைத்துக்கூடப் பார்க்க இயலாது.


அதிகமாக உண்ணுதல் ஒருபோதும் நன்மை தராது. ரஷ்ய நாட்டில் 'கார்கோவ்' நகரைச் சேர்ந்த பேராசிரியர் 'நிகிடின்' என்பவர் தன் உயிரியல் ஆய்வுக் கூடத்தில் இதுபற்றி பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இரு குழுக்களாக அவர் எலிகளைப் பிரித்துக் கொண்டார். முதல் குழுவுக்கு மிகச் சிறந்த தீனியை மிகக் குறைந்த அளவில் எலி ஒன்றிற்கு ஒரே ஒரு கிராம் அளவு உணவாகத் தந்தார். மற்றொரு குழுவைச் சேர்ந்த எலிகளுக்கு அதே வகை சிறந்த சத்தான தீனியை அளவுக்கதிகமாக ஊட்டினார். விளைவு என்ன வென்று நினைக்கத் தோன்றுகிறது? மிகவும் அதிசயமாக பட்டினியுடன் சிறு தீனி தின்று வந்த எலிகள்தாம் பெருந் தீனி தின்றுவந்த எலிகளைவிட பல நாட்கள் வாழ்ந்தன.


சில பிராணிகள் அடிக்கடி உணவுண்ணும் பழக்கம் கொண்டவை. மூஞ்சுறு எலிகள் 14 மணி நேரத்துக்கு மேல் பட்டினியைப் பொறுத்துக்கொள்ளாது இறந்துவிடும். பூனை பட்டினி பொறுக்கக் கூடியது. ஆனாலும் நாள் ஒன்றுக்கு சிறிதளவு 10 முறை சாப்பிட்டே வரவேண்டும் என்ற நிபந்தனை அதற்குப் பொருந்தும். கொள்ளும் உணவை பல தவணைகளாகப் பிரித்து சிறிது சிறிதாக அடிக்கடி உண்ணக் கூடிய பிராணியாகும் இது.


தென் அமெரிக்கக் காடுகளில் மண் புற்றுகளில் வசிக்கும் சில ஐந்துக்கள் தம் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே உணவு உட்கொள்ளும் தன்மையுடையது. 'மே ப்ளை எனப்படும் ஈ வகைகள் தாம் முழு வளர்ச்சி அடைந்தவுடன் உணவு உண்பதை நிறுத்தி விடுகின்றன. ஆகவே, 'உணவுப் பழக்கத்திலும்' எந்தவித நியதியையும் சரிவரக் கடைப்பிடிக்காத ஒரே ஜீவன் மனிதன்தான் என்று கொள்ள வேண்டும். 

 


எளிய மனிதன் - இனிய வாழ்வு



ஜீரணத்தைப்பற்றி அறிந்துகொள்ளும்போது மற்றொரு சேதி. மனித உடலின் எடை அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும். குறிப்பாக உணவுண்டபின் எடை கூடுவதை அனைவரும் அறிவோம். 300 ஆண்டுகளுக்கு முன்னமே இத்தாலியில் பதுவா நகரைச் சேர்ந்த மருத்துவர் 'சாண்டரியோ' என்பார் மனிதனது எடையின் ஏற்ற இறக்கங்களுக்குக் கீழ்க்காணும் காரணங்களைக் கற்பித்தார். 

1) உடலில் இருந்து கரியமில வாயு வெளியேறும்போது எடைக் குறைவதுண்டு.


(2) அதிக வியர்வை வெளிப்படும்போது எடைக்குறைவு நிகழ்வதுண்டு.


3) குடிக்கும் நீர் மற்றும் நீர்ச்சத்து இரத்தத்திலிருந்து வியர்வை சுரப்பிகளாலும், சிறுநீரகங்களாலும் உறிஞ்சப்படும்போது எடைக்குறைவு ஏற்படும்.

எடையைக் குறைத்தால் பல தொல்லைகளைத் தவிர்த்து இனிய வாழ்வுதனைப் பெறலாம்.


தண்ணீர்த் தொட்டி


மனிதன் குடிக்கும் நீரெல்லாம் வியர்வை, சிறுநீர் என வெளியேறியும் மேலும் மேலும் நீரைக் குடிக்கின்றான். மனிதர்கள் அனைவரது நீர்த் தேவைகள் பெருகிக் கொண்டே வருகின்ற இந்நாளில் ஒருதினம் குடிப்பதற்கு நல்ல நீரே இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டால் என்னா வது?


அப்படியானால் மனிதன் கடல் நீரைக் குடித்து வாழ முடியுமா? சிறுநீரகம்தான் நம் உடலின் மிகப்பெரிய தொட்டி. இந்த சுத்தப்படுத்தும் கருவி நம்


உடலிலுள்ள கால்சியம், பொட்டாசியம், சோடியம் மற்றும் ஏனைய கழிவு உப்பு களையும் வெளியேற்றி சிறுநீர் வழியாக அனுப்புகிறது. சிறுநீர் கரித்த சுவையில் இருப்பதற்கு இதுவே காரணம். இத்தகைய உப்புகள் சிறுநீரைவிட கடல்நீரில் அதிக விகிதத்தில் இருப்பதால்தான் கடல் நீரை நம்மால் குடித்துப் பழகிக்கொள்ள நம் உடல் ஒத்துக்கொள்வதில்லை.


இருந்தாலும் ஏ.பாம்பார்டு என்ற பிரஞ்சு விஞ்ஞானி தன்னந்தனிப் படகில் நடுக்கடலில் நல்ல நீரை எடுத்துச் செல்லாமல் கடல் நீரைப் பயன்படுத்தியே எந்த நோயும் வராது 45 நாட்கள் வரை தாக்குப் பிடித்து தன் பரிசோதனையை முடித்துக் கொண்டார். அப்படியானால் கடல் நீரிலேயே வாழும் மீன் இனங்கள் உப்புநீரை உட்கொண்டா வாழ்கின்றன என்று யோசிக்கத் தோன்றுகிறது. மீன் இனங்களின் சிறுநீரகங்கள் மிகமிகச் சிறியவை என்பதோடு அசுத்தங்களைப் பிரித்தெடுக்கும் திறன் அற்றவை. ஆனால், மாறாக மீன்களின் கழுத்துச் செதில்களில் நீரைச் சுத்தப்படுத்தும் மிகச் சிறந்த அமைப்பு ஒன்று உள்ளது. இது மீன்களின் இரத்தத்திலுள்ள கழிவு உப்புகளைக்கூடப் பிரித்து எடுத்து சளி போன்ற பொருளாக செதில் வழி வெளியேற்றி விடுகிறது. மீன்களின் செதில்களில் இத்தகைய சளிப்பொருள் அதிகம் தங்கியிருந்தால் நாம் அந்த மீன்களை உணவுக்காக வாங்குவதில்லை அல்லவா! கழிவுகள் அதிகமாக செதில் பகுதியில் சேர்ந்திருப்பது மீன் இறந்து அதிக நேரம் ஆகிவிட்டதைக் குறிக்கிறது. எவரும் நாள்பட்ட மீனை உணவுக்காக நாடுவதில்லையே.

 யார் இங்கே குரங்கு?


நமக்கெல்லாம் தெரிந்த ஒரு சொற்றொடர் 'குரங்கி லிருந்து பிறந்தவன் மனிதன்' என்பது. இதற்கு சான்றுகள் உண்டா?


1) மனிதன் வயிற்றில் கருவாக இருக்கும்போதே முதலில் இருந்து ஒரு வால் பகுதி அக்குழந்தையிடம் காணப்படுகிறது. 

2) 'சாண்டியாகோ' நகரில் 10 வயது பையன் ஒருவனுக்கு திடும் என்று சிறு வால் ஒன்று முளைத்தது. 'பண்டைய பண்பு திரும்பி வரும் செயல்' என்று விஞ்ஞானிகளால் இது ஊகிக்கப்பட்டுள்ளது.


3) மனிதனின் முதுகெலும்பு கீழே முடியும் இடத்தில் ஒரு சிறு வால் எலும்பு உள்ளது.


4) கரடிக்குப் பிறகு குரங்கும் மனிதனுமே உடலில் அதிக ரோமம் உடைய பாலூட்டிப் பிராணிகள்.


காடு காட்டும் பாடம்


தொடக்கம் முதலே காடுகள் மனித வாழ்வில் பெரும் அங்கம் வகிக்கின்றன. மரங்கள் மனித வாழ்க்கையை ஒவ்வொரு நிலையிலும் பெரிதும் பாதிக்கின்றன. குரங்கில் இருந்து மனிதன் பிறந்த கருத்தை ஒத்துக்கொள்ள வேண்டுமென்றால் மனிதன் மரங்களில் இருந்துதான் தரைக்கு இறங்கி வந்திருக்க வேண்டும்.


முதல் மனிதன் ஆதாம் ஆப்பிள் மரத்தைக் கண்டு அதன் பழத்தை விரும்பினான் என்கிறது கிறித்துவ வேதம். மரத்தடியில் மகான்களும், துறவிகளும் மதத்தையும், ஞானத்தையும் போதித்தனர். குருகுல வாசப் பாடங்கள். மரத்தடியிலே நிகழ்ந்தனவாம். புத்தரின் ஞான உதயம் போதி மரத்தடியில்தானே. உணவுக்கும், வாழ வீடு கட்டவும், முக்தி நிலை அடையவும் மனிதனுக்கு மரமன்றோ ஊக்கம் தருவது? இன்று நாட்டிலும், சமவெளி பகுதியிலும்கூட 'வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்' என முயற்சிக்கிறோம். 'காட்டுக்குப் போ' என்று எவரையும் திட்டுவதாக நினைத்துக் கொண்டு நாம் கூறுவது தவறு. ஏனெனில் காட்டுக்குப் போகிறவன்தான் நன்றாக வாழ்வான். நாம் வெளிவிடும் மூச்சுக்காற்றிலுள்ள கரியமில வாயு, காடும் மரஞ்செடிகளும் இல்லாவிட்டால் நம்மைத்தான் சுற்றிச் சுற்றி வரும் என்கிறது விஞ்ஞானம்.

உருவங்கள் மாறாது


மனிதனது 'கண்' நவீன புகைப்படம் அல்லது

தொலைக்காட்சிக் காமிராவைப் போன்ற ஆற்றலுடையது. ஒளிக்கதிர்களை ஒடுக்கம் செய்யத்தக்க சிறப்பாற்றலுடன் அவ்வாறு ஒடுக்கம் செய்யப்பட்ட உருவை கண்ணின் கீழ் சுவரின் உள்புறத்தில் புலப்படச் செய்கின்ற திறனும் கண்களிடம் உள்ளது. இத்துடன் விழுகின்ற பிம்பத்தை தெரியச் செய்வதற்குத் தேவையான ஒளியை புகச் செய்யும். அசையக் கூடிய திரை அமைப்பும் கண்ணில் உள்ளது. கண்ணில் அமைந்துள்ள மிகுந்த புலனுணர்வு உள்ள பகுதிகள் கண் நரம்பு மூலம் மூளையின் ஒரு பகுதியுடன் தொடர்பு வைத்துக்கொள்வதால் தேவையான உருவங்கள் நம் கண் திரையில் மூளையின் கட்டளைக்கேற்ப வேண்டிய அளவிலும் நேரத்திலும் பதிப்பிக்கப்படுகிறது. செயல்திறனில் கண்ணினை தொலைக்காட்சிக் காமிரா பதிவு செய்த ஒளி அலைகள் தொலைக்காட்சிப் பெட்டியில் விழுகின்ற பௌதீகக் கொள்கை ஒன்றிற்கு ஒப்பிடலாம்.


கண்ணின் ஒளிகாட்டும் சக்தி அதனுடைய லென்ஸ் பகுதியைச் சேர்ந்த கார்னியாவின் ஒளி காட்டும் சக்தியை அடிப்படையாகக் கொண்டது. கார்னியாவும் அதனை ஒட்டிய கீழ்ப்பகுதியில் உள்ள பாய்மப் பொருளும் கொண்டுள்ள ஒளிப்பிரிதல் ஏறத்தாழ நீரின் ஒளிப்பிரிதல் சக்தியை ஒத்தது. இக்காரணத்தினால் நீர் அடியில் செல்லும் மனிதன் பார்வை சற்று மங்கிய நிலையில் உள்ளது. இந்தக் கண்ணைப் பெறுவதற்கு நாம் என்ன விலை கொடுத்தோம்.

போட்ட கணக்கு பொல்லாத கணக்கு அக்காலப் புராணம் மாம்பழத்துக்காக முருகப்பெரு மான் மயில் மீதேறி உலகை வலம் வந்ததாகக் கூறுகிறது. எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டு எத்தனை மைல் பரப்புள்ள உலகை குமரன் சுற்றினான் என்ற செய்தி ஏதும் இல்லை. ஆனால் மனிதருள் பலர் விரைவு வாகன வசதிகள் ஏதும் இல்லாப் பழங்காலத்தில்கூட உலகின் பரப்பை அறிய மிகவும் முயற்சித்துள்ளனர்.


பயணமும் பல் வான சாஸ்திரிகள் எத்தகைய மேற்கொள்ளாமலே சூரியன் பயணம் செய்யும் டிகிரிகள், சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் இவற்றை குத்துமதிப்பாக அறிந்து வெளியிட்டனர். முதன் முதலாக உலகின் பரப்பை அறிந்து வெளியிட்ட மனிதரும் எத்தகைய உலகப் பயணத்தையும் மேற்கொள்ளவில்லை. பின் எப்படி முடித்தார் இச் செயற்கரிய செயலை? கிறிஸ்து பிறப்பதற்கு 250 ஆண்டுகளுக்கு முன் எகிப்து நாட்டில் அலெக்சான்ட்ரியா நகரில் வாழ்ந்த இம் மனிதர் ஒரு நூலகர். 'எரஸ்டோஸ் தினஸ்' என்பது பெயர். இவர் சிறந்த அறிவு நுட்பத்துடன் எளிதாக ஒரு கணக்கைப் போட்டார். முன்னோர்கள் கணித்த விதிகளின் அமைப்புப்படி ஜூன் மாதம் 21-ஆம் தேதி எகிப்தில் உள்ள அஸ்வான் அணைக்கட்டின் அருகே சூரியன் சரியாக செங்குத்தாக பகல் 12 மணிக்கு தலைக்கு மேல் சைபர் டிகிரி பாதையை அடைகிறது. அச்சமயம் அங்கு இருந்து 5000 ஸ்டாடியா தூரத்தில் அதாவது வடக்கே 500 மைல் தள்ளி இருக்கும் அலெக்சான்ட்ரியா நகரில் அதே நாள் பகல் 12 மணிக்கு சூரியன் 71/2 டிகிரி சாய்மானத் தில் உச்சியின் தென்பட்டதை எரஸ்டோஸ் தினஸ் கணக்கிட்டுக் கொண்டார். சூரியன் உலகை சுமார் 360 டிகிரிக் கோணத்தில் முழுச் சுற்றுச் செய்வதால் 360 டிகிரியில் 7V/2 டிகிரி 48-இல் ஒரு பங்கு எனக் கணக்காயிற்று. இந்த 48-இல் ஒரு பங்கே 500 மைல்கள் எனும்பொழுது 500 மைல்களை 48 மடங்காய்ப் பெருக்க உலகின் சுற்றளவு விஸ்தீரணம் 2400 மைல்கள் என எளிதில் கணக்கிட்டு விட்டார் இந்த மனிதர். இது ஓரளவு சரியான மதிப்பீடே ஆகும்.


No comments:

Post a Comment

ராணி லட்சுமிபாய்

  ராணி லட்சுமிபாய்: பிறப்பு, குடும்பம் மற்றும் கல்வி  ராணி லக்ஷ்மிபாய் நவம்பர் 19, 1828 இல் மராத்தி கர்ஹடே பிராமண குடும்பத்தில் மோரோபந்த் தம...